மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு : 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

மத்திய மலையக பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் ,திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில்   பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (03) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சமையலறையில் இருந்த 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்திருப்பதாக திம்புள்ள பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மலையக பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.