மனித சங்கிலி போராட்டம் நாளை நடைபெறும்: அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

சென்னை: சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க நாளை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கி.வீரமணி, திருமாவளவன், வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் கூட்டறிக்கையில் தகவல் அளித்துள்ளனர். மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயலும் பிரிவினை வாதிகளை ஒருபோது அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளார். சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 17 கட்சிகளும் 44 இயக்கங்களும் பங்கேற்பார்கள் என்று அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.