புதுடில்லி : உலக மனநல தினத்தையொட்டி, தொலைபேசி வாயிலான, தேசிய மனநல ஆலோசனை திட்டம் மற்றும் இலவச உதவி மைய எண்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.
உலக மனநல தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனை வழங்கும் தேசிய திட்டத்தை கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெலாட் நேற்று துவக்கி வைத்தார். மத்திய சுகாதாரத்துறையின் இந்த திட்டத்தை பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் கல்வி நிறுவனத்தில் அவர் துவக்கினார்.
அனைத்து மாநிலங்களிலும் தொலைபேசி வாயிலாக இலவச மனநல ஆலோசனை வழங்கும் உதவி மையத்திற்கான எண்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை, பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமும், தேசிய சுகாதார அமைப்புகளுக்கான மையமும் அளிக்க உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement