திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்நுட்ப, தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிலையங்களில் இந்தி வழியில் கற்பிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசுப் பணிக்கான தேர்வுகளிலும், ஐஐடி, ஐஐஎம் உள்பட கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாயமாக்க அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு சிபாரிசு செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியை கட்டாயமாக்கும் இது போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு பினராய் விஜயன் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.