4வது வந்தே பாரத் ரயில் சேவையை இன்று துவக்கம்

இமாச்சல பிரதேசம்:
நாட்டின் 4வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.  இமாச்சல பிரதேச மாநிலம் உனாவில், மருந்து பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

அம்ப் அந்தவுரா ரயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. 5 மணி 20 நிமிடங்களில் 412 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் சென்றடையும்.

இதுமட்டுமின்றி சம்பாவில் இரண்டு நீர் மின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டி, பிரதமரின் கிராம சடக் யோஜனா திட்டத்தை மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.