ஒரு தவறு செய்து விட்டேன் என கூறி இந்திய வம்சாவளியானபிரித்தானிய பெண் மந்திரி சுவெல்லா பிரேவர்மென் பதவி விலகியுள்ளார்.
பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் (வயது 42) உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன் என கூறி அவர் மந்திரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
பிரதமருக்கு அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதம்
இதுபற்றிய தனது பதவி விலகல் கடிதம் ஒன்றை லிஸ் டிரஸ்சுக்கு அனுப்பியுள்ளார். எனினும், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் என அவர் கூறியுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி நிதியமைச்சர் பதவியில் இருந்து குவாசி வார்தெங் நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரத்திற்குள் டிரஸ்சின் அமைச்சரவையில் 2 ஆவது அமைச்சர் பதவியில் இருந்து விலகி சென்றுள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையில் இருந்து அவர் விலகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.