2022 ரி 20 உலகக் கிண்ண போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் தோல்வியடைய செய்து, இலங்கை அணி 16 அணிகள் விளையாடும் சுப்பர்-12 சுற்றில் (பிரதான சுற்றுக்கு) விளையாட தகுதி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் ஜீலோங்கில் இன்று (20) காலை 9.30 ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் 79 (44) ஓட்டங்களையும், சரித் அசலங்க 31 (30) ஓட்டங்களையும், பானுக ராஜபக்ச 19 (13) ஓட்டங்களையும் பெற்றனர்.
இதையடுத்து, 163 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார்.
இதேவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது