கடலில் குளிக்கச் சென்ற மாணவன் உயிரிழப்பு

அம்பலாங்கொட கடற்கரையில் நேற்று(20) காலை குளிக்கச் சென்ற பாடசாலை சிறுவர்கள் சிலர் கடலலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.

ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் ,மேலும் ஒரு மாணவன் காணாமல் போயுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொட கிராமிய வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காணாமல் போன மாணவனை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.