வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :தாஜ்மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை கோரிய மனுவை, ‘விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு’ என கூறி, உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ராஜ்னீஷ் சிங் என்பவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:தற்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் ஏற்கனவே சிவன் கோவில் இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே, தாஜ்மஹாலின் வரலாறு குறித்து உண்மை கண்டறியும் விசாரணை நடத்த வேண்டும். மேலும், அங்குள்ள 23 அறைகளையும் திறந்து ஆய்வுநடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:இந்த மனு மேம்போக்காக, விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement