வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகத்தின் குழப்பமான பிரச்னையை தீர்க்க என்னால் முடியும். எனவே, என்னை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என ஜகன்னாத் சவாந்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இது போன்ற மனுக்களை எதிர்காலத்தில் அனுமதிக்க வேண்டாம் என பதிவாளருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஜகன்னாத் சவாந்த் என்பவர் உச்சநீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகி, சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட என்னை அனுமதிக்கவில்லை. தான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதால், உலகத்தின் குழப்பமான பிரச்னைக்கு தீர்வு காண முடியும் . எனவே, என்னை ஜனாதிபதியாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டிஓய் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு அற்பமானது. நீதிமன்ற நடவடிக்கைகளை அவதூறு செய்வது போல உள்ளது. கேலிக்குரியதாகவும் வழக்கு உள்ளது. எதிர்காலத்தில், இதுபோன்ற மனுக்களை பதிவாளர் தாக்கல் செய்ய அனுமதிக்கக்கூடாது. மனுதாரர் கூறிய கேவலமான கருத்துகளை பதிவில் இருந்து நீக்க வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement