வெறுப்பு பேச்சு வழக்கில் அரசுக்கு கோர்ட் எச்சரிக்கை| Dinamalar

புதுடில்லி :’வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுக்களை ஒடுக்க நடவடிக்கை எடுங்கள், இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு மற்றும் அதனால் ஏற்படும் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக்கோரி, ஷாஹீன் அப்துல்லா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதில், முஸ்லிம் சமூகத்தினர் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சுகளில் ஆளுங்கட்சி தலைவர்கள் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நாம் 21ம் நுாற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், மதத்தின் பேரால் நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்பது தெரியவில்லை. இந்த வெறுப்புணர்வு பேச்சுகளை ஒடுக்க மத்திய அரசு தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.