நாக்பூர் : மஹாராஷ்டிராவில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால், பல பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டன.
மஹாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில், மல்கேட் – திமட்லா ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன் தினம் இரவு 11:20 மணிக்கு, நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன.
இதையடுத்து, அந்த வழியில் செல்ல வேண்டிய பல பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, நேற்று காலையில் அந்தப் பாதையில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement