சென்னை: வடசென்னை பகுதிகளின் சாலைகளில் தேங்கிய பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு கழிவுகளை மட்டும் தனியாக கும்மிடிப்பூண்டி குப்பை கிடங்குக்கு அனுப்புகின்றனர். நாடு முழுவதும் நேற்று பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது.