ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் சக பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சி.ஆர்.பி.எப்., அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் உதம்பூரில் உள்ள சி.ஆர்.பி.எப்., முகாமில் கமாண்டன்ட் ஆக பணியாற்றி வருபவர் சுரீந்தர் சிங் ராணா. இவர், இங்கு பணியாற்றி வரும் சக பெண் அதிகாரிக்கு பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்ததாக, அந்த பெண் அதிகாரி, போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து சுரீந்தர் சிங் ராணா மீது, பாலியல் தொல்லை கொடுத்தது, உள்நோக்கத்துடன் மன ரீதியக தொல்லை கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சி.ஆர்.பி.எப்., பிரிவிலும், இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement