நீர் மின் உற்பத்தியில் 65 சதவீத அதிகரிப்பு

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிப்பதனால் நாளாந்த நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதன்படிஇ நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் 65 வீதமானவை நீர் மின் நிலையங்களினால் பூர்த்தி செய்யப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதனால் நாளாந்த மின் துண்டிப்பை குறைப்பதற்கான வழிகள் குறித்து ஆராயுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படிஇ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.