கனமழை
காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 27) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக சில இடங்களில் லேசானது முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழையால் இன்றைய தினம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.