கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு: காரணம் குறித்து பெற்றோர் அளித்த அதிர்ச்சி தகவல்

திருவேற்காட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை. மகளின் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர்.
திருவேற்காடு, கருமாரியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் உதயகுமார் – உமா தம்பதியினர். இவர்களுக்கு ஸ்ரீநிதி (19) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீநிதி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் உமா எழுந்து பார்த்துள்ளார். அப்போது மகள் ஸ்ரீநிதி அருகில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
image
இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார், தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தனது மகளின் தற்கொலைக்கு ஏற்கனவே குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளர் தான் காரணம் என தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் நிலையம் அருகே மாணவியின் பெற்றோர் கூறுகையில்… நாங்கள் ஏற்கனவே திருவேற்காடு, சிவசங்கர் நகர் பகுதியில் வினோத் – ரேவதி தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தோம். குடும்ப பிரச்னை காரணமாக ரேவதியிடம் இருந்து இரண்டு பவுன் நகையை வாங்கி அடகு வைத்தோம். தற்போது அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறோம்.
image
இந்நிலையில் வினோத் தனது மனைவிடம் இருந்து நாங்கள் ஏழு பவுன் நகை வாங்கி விட்டதாகவும் அதனை திருப்பித் தருமாறு வீட்டிற்கு வந்து கேட்டார். ஆனால், தாங்கள் இரண்டு பவுன் நகையை மட்டுமே வாங்கியதாக தெரிவித்தோம் ஆனால் வினோத், திருவேற்காடு போலீசில் ஏழு பவுன் நகையை வாங்கியதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திருவேற்காடு போலீசார் அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதனால் தனது குடும்பத்தினரை போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற மன உளைச்சலில் இருந்த எங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தங்கள் தரப்பு நியாயத்தை போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தனது மகள் செல்போனில் தெரிவித்ததாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மகனின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து வைத்துள்ள நிலையில், தனது மகளுடன் பேசிய போலீஸ் அதிகாரி யார் என்பது குறித்தும் தனது மகள் தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.