அலறி ஓடிய எடப்பாடி அணி; ஆபரேஷன் அமமுக தோல்வி!

முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி வருகிறது. ஒரு வழியாக

மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி அறிவித்துவிட்டார்.

இதை தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியையும் பொதுக்குழு உறுப்பினர்கள் வாயிலாக பெற்றுவிட்டார். ஆனால், இன்னும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் உள்ளதால் எடப்பாடிக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

இதை பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் தமிழ்நாடு முழுவதும் முக்கிய பொறுப்புகளில் தனக்கு வசதியான நிர்வாகிகளை நியமித்தல் என்று ஓ.பன்னீர்செல்வம் பிசியாக கட்சி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த முடியாத அளவுக்கு உச்சநீதி மன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆப்பு வைத்து விட்டபடியால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றுவதில் பின்னடைவை சந்தித்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ்சின் அரசியல் நகர்வுகளையே கண்டுபிடிக்க முடியாமல் திணறும் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் டிடிவி தினகரன் வளைக்குள் விரலை விட்டு லம்பாக வாங்கிக்கட்டிக்கொண்டதாக பரவும் தகவல் தென்மாவட்ட அரசியல்வாதிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, தென்மாவட்ட அமமுக நிர்வாகிகள் சிலர் கட்சி செலவுக்கு போதுமான அளவுக்கு காசு கொடுப்பது இல்லை என, டி.டி.வி தினகரன் மீது மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை எடப்பாடி பழனிச்சாமியின் காதில் போட்ட மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தட்டி தூக்க ‘ஆபரேஷன் அமமுக’ உத்தரவு போடுங்கன்னே. மற்ற எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம்’ என கெஞ்சி உள்ளனர்.

என்னப்பா நீங்க.. நம்ம எடுக்குற எல்லா வேலைகளும் தோல்வியில தான் முடியுது. டிடிவி ஒரு மாதிரியான ஆளு. நாம போய் அவருகிட்ட ஏடா கூடம் பன்னிகிட்டு இருந்தோம்னா வேற மாறி ஆயிடும்’ என எடப்பாடி மறுத்து பேசியுள்ளார்.

அதற்கு மூத்த நிர்வாகிகள், ‘அதுக்காக நாங்க சொல்லலன்னே. இதுபோல செய்தால் தான் எடப்பாடியாருக்கும் பாலிடிஸ் தெரியும்னு கட்சிக்காரனும் மதிப்பான்’ என்று உச்சி கொம்பில் எண்ணெய் பூசியதை தொடர்ந்து ஒருவழியாக ஆபரேஷன் அமமுக.. என கூறிவிட்டு தனக்கு தானே சிரித்துக்கொண்டு வீட்டுக்கும் சென்று கதவை சாத்திக்கொண்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தென்மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் உதயக்குமார் தரப்பு, ‘எடப்பாடியாருக்கு உங்கள் மீது தனிப்பிரியம் வச்சிருக்கார்.

டிடிவி உங்கள டம்மியான போஸ்ட்ல வச்சிருக்காருன்னு சொல்லிஅடிக்கடி வருத்தப்படுறார். ஃப்ரீயா இருந்தா வாங்களேன். ஒரு சந்திப்பை போடுவோம்’ என்று கூறியுள்ளார்.

அதற்கு அமமுக நிர்வாகியோ, ‘நாம பேசிகிட்டு இருப்பது ரெக்கார்டு ஆயிகிட்டு இருக்கு. மக்கள் செல்வருக்கு அனுப்பி வைக்கவா?’ என்று கேட்ட மறு நிமிடமே போனை துண்டித்துவிட்டு, ‘ஆபரேஷன் அமமுக டீம்’ தலைதெறிக்க ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.