புதுடெல்லி: உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு ஒன்றிய அரசு கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி வழங்கினார். இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், திமுகவும் ஒரு மனுதாரராக உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலிதா, நாளை மறுதினம் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.