விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து அந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் கடந்த வாரம் அசல் கோளாறு அவர் செய்த சில கோளாறான செயல்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து வாராவாரம் நடக்கும் வெளியேற்று படலத்தில் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் அசீம், ஆயிஷா, விக்ரமன், கதிரவன் மற்றும் ஷெரினா போன்ற போட்டியாளர்கள் உள்ளனர். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் மணிகண்டன், ராம், குயின்சி, நிவாஷினி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகிய ஐந்து போட்டியாளர்களையும் ஒருவர் கூட நாமினேட் செய்யவில்லை என்பது தான். தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போபவர் ஷெரினா என்று கூறப்படுகிறது.
ஏனெனில் நாமினேஷனில் இருக்கும் மற்ற போட்டியாளர்களை விட ஷெரினாவிற்கு தான் வாக்குகள் குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பொம்மை டாஸ்க்கில் ஷெரினாவின் செயல், குறும்படத்தில் வெளிவந்த உண்மை போன்றவற்றின் காரணமாக ஷெரினா மீது மக்கள் அதிருப்தி அடைந்திருக்கக்கூடும் அதனால் அவரே இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறலாம் என்றும் கருதப்படுகிறது. இருப்பினும் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தான் யார் உண்மையாக வெளியேறுகிறார்கள் என்பது தெரியவரும்.