தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (நவம்பர் 7ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னை
கிண்டி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக நாளை (நவம்பர் 7ம் தேதி) மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை சபரி சாலை, ஐயப்பா நகா் 1 முதல் முதல் 11-ஆவது தெரு வரை, மேடவாக்கம் பிரதான சாலை, கணேஷ் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருநெல்வேலி
தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ( நவம்பர் 7ஆம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி
தெங்கம்புதூர், தோவாளை மின் வினியோக பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவம்பர் 7-ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திண்டுக்கல்
நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக, துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.