புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் காலமானார். இதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதி காலியானது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் சட்டமன்ற தொகுதி சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ முகமத் அசாம் கான் உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு காரணங்களால் ஒடிசாவின் பதம்பூர், பீகாரின் குர்ஹானி மற்றும் சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர் சட்டமன்ற தொகுதிகளும் காலியானது. இதனை தொடர்ந்து மெயின்புரி மக்களவை மற்றும் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.