அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை! கால அவகாசம் கோரும் ரணில் தரப்பு


ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த நாட்டை எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும், அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கோண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மக்களின் நம்பிக்கை

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை! கால அவகாசம் கோரும் ரணில் தரப்பு | Ranil S Side Demanding Time Sri Lanka Government

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் வறுமை நிலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால், குழந்தைகளின் போஷாக்கு நிலையை பாதுகாக்கும் வகையில் இவ்வாறான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

கால அவகாசம் தேவை

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை! கால அவகாசம் கோரும் ரணில் தரப்பு | Ranil S Side Demanding Time Sri Lanka Government

ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உத்தரவாத வேலைத்திட்டம் பாரிய பலமாக உள்ளது.

தன்னார்வ அடிப்படையில் இவ்வாறான போஷாக்கு வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்வதையும் பாராட்டினார்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த நாட்டை எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் எனவும், அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை.

சரியான தொலைநோக்குப் பார்வையின் ஊடாக நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு, மாறாத கொள்கைக் கட்டமைப்பொன்று தயாரிக்கப்பட வேண்டும், தேவைக்கு ஏற்ப அதனை சட்டமாக்கி முன்னோக்கி நகர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.