மாலைத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மாலைத்தீவு தலைநகர் மாலேவில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று (10) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள வாகன பழுது பார்க்கும் கடையில் முதலில் பிடித்த தீ விரைவாக கட்டிடம் முழுவதும் பரவியதால் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் 10 பேர் உயிரிழந்தனர்.
அவர்களது உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டு விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்களில் 9 பேர் இந்தியர்கள்.ஒருவர் பங்களாதேஷை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக மாலைதீவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் மாலேயில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததால் கவலை அடைந்துள்ளோம். மாலைதீவு நிர்வாகத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.