Jio 5G பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் அறிமுகம்! இனி அதிவேக இணைய சேவை பெறலாம்!

ஜியோ நிறுவனம் அதன் 5G சேவையை நவம்பர் 10 முதல் பெங்களூரு மற்றும் ஹைதெராபாத் ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. இந்த
சேவை கடந்த அக்டோபர் 1
அன்று இந்தியாவில் வெளியானது.

முதல்கட்டமாக இந்த 5G சேவை இந்தியாவின் முக்கிய நகரங்களாக உள்ள மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் வெளியிட்டது. தற்போது இந்தியாவின் IT தலைகாரமான பெங்களூரு மற்றும் ஐதராபாத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நகரில் உள்ள Jio வாடிகையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்தவேண்டும் என்றால் ஜியோ நிறுவனத்தின்
‘Jio Welcome Offer’
வரும் வரை காத்திருக்கவேண்டும்.

இந்த வரவேற்பு கிடைத்த வாடிகையாளர்களால் 1GB+ வேகத்தில்
அதிவேக அன்லிமிடெட் இணைய சேவையை
பயன்படுத்தமுடியும். இந்த சேவைக்கு கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை.

இது குறித்து பேசிய ஜியோ நிறுவனம் “இந்த இரு IT நகரங்களிலும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நாம் புதிய கண்டுபிடிப்புகளின் உண்மையான திறனை காணமுடியும். இது மனிதர்களுக்கு மிகவும் உதவிகரமாகவும்
இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்
” என்று கூறியுள்ளது.

இந்த
ஜியோ நிறுவனத்தின் True 5G சேவை
ஒவ்வொரு கட்டங்களாக இந்தியா முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. முதல் முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள புனித தலமான நாத்துவாரா நகரில் அந்த நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி முன்னிலையில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த 5G சேவையை பயனொடும் வாடிகையாளர்களால் 500MB முதல் 1GB வேகம் வரை இணைய சேவை பெறமுடியும். அந்த நிறுவனத்தை பொறுத்தவரை வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லாத அளவு மிகப்பெரிய 5G கட்டமைப்பு வசதிகள் உள்ளது. அந்த நிறுவனத்திடம் 700MHz, 3500MHz, 26GHz அளவிற்கு பேண்ட் வசதிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.