வாக்குகள் குறைந்தால் நீங்கள்தான் பொறுப்பு.. பூத் முகவர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகி வரும் நிலையில் தமிழகத்தில் திமுகவின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 269வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்திற்கான முகவர்கள் பங்கேற்றனர். அப்போது

முகவர்கள் மத்தியில் காணொளி காட்சி வாயிலாக பேசிய திமுக தலைவர் முக

, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40/40க்கும் பெற திமுக தொண்டர்கள் இலக்கை பெற இப்போது இருந்து தேர்தல் பணிகளை தொடங்க வேண்டுகோள் விடுத்தார். 234சட்டமன்ற தொகுதியில் உள்ள பூத் முகவர்கள் ஆர்வத்துடன் செயல்படுமாறும் திமுக நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திமுக தேர்தலுக்கான கட்சியாக இல்லாமல் எப்போதும் மக்களுடன் இருப்பது போன்று திமுக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு முகவர்கள் குறைந்தபட்சம் 25வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று சிறிய இலக்கை கொண்டு செயல்பட வேண்டும் என்றார். இதை தொடர்ந்து பேசிய அவர், வாக்காளர்கள் அரசுக்கு இடையே பூத் கமிட்டி முகவர்கள் பாலம் போல் செயல்பட வேண்டும் என்றும் வாக்குச்சாவடியில் வாக்குகள் குறைவாக இருந்தால் பூத் முகவர்கள் தான் பொறுப்பாவார்கள்.

வாக்காளர்கள் பட்டியல் நடைபெறும் சிறப்பு முகாமில் திமுகவினர் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்றார். 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் அரசு நிர்வாகத்தை சுருட்டிவிட்டு சென்று விட்டார்கள் எனவும் குற்றஞ்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.