இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 11 இலங்கை மீனவர்கள் அதிரடி கைது

திருமலை: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேரை ஆந்திர கடலோர காவல்படையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடலோர காவல்படை அதிகாரிகள் கடந்த 10ம்தேதி கலிங்கப்பட்டினம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலோர காவல்படையின் எதிர் திசையில் 2 படகுகள் வந்தன. அதிகாரிகள் அதனை நிறுத்தி படகுகளை சோதனையிட்டனர். அதில் 11 இலங்கை மீனவர்கள் இருப்பதும் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விதிகளை மீறி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 11 பேரையும் காக்கிநாடா மரைன் போலீசார் நடுக்கடலில் கைது செய்து கரைக்கு அழைத்து வந்தனர். மேலும் படகுகளில் இருந்த மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை காக்கிநாடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.