மகேஷ்பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவிற்கு மாரடைப்பு : மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் கிருஷ்ணா. ஏராளமான வெற்றி படங்களில் நடித்த இவர் படங்கள் தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இவரது மகனான கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். வயது மூப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு திடீரென இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குடும்பத்தினர் உடன் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.