கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் வெள்ளக்காடான நியூ சவுத் வேல்ஸ் மாகாணம்..!

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பெய்த கனமழையால், அம்மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

அங்கு கடந்த 118 ஆண்டுகள் இல்லாத அளவாக அதி கனமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததோடு, Wyangala என்ற அணை நிரம்பி, உபரி நீர் வெள்ளம் போன்று சீறிப்பாய்ந்து கொண்டு வெளியேறியது.

நியூ சவுத் வேல்ஸ் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாக மக்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.