தேனி: மது குடிப்பதை தாய் கண்டித்ததால் மகன் எடுத்த விபரீத முடிவு.!

தேனி மாவட்டத்தில் மது குடிப்பதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சூர்யா(25). இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூர்யா, வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுகுடிப்பதை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.