தத்துவத்தின் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து, பல பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.நா.,வின் யுனெஸ்கோ சார்பில் ஆண்டுதோறும் நவ., மூன்றாவது வியாழன் (நவ. 17) உலக தத்துவ தினமாக கடை பிடிக்கப்படுகிறது. மனித நாகரிகத்தை வழிமொழிவதில் தத்துவஞானிகளின் பங்கு அளப்பரியது. நீதி, நேர்மை, அமைதி, சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது. சாக்ரடீஸ் போன்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படித்துணர்ந்து நடக்க வேண்டும்.
இந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூற முடியும்; நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முடியும் என்றும், தத்துவங்களே உலகை ஆள்கின்றன என்றும் கருதப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement