சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் தீ விபத்து!

சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய மின் மாற்றியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருக்கக்கூடிய சென்னை அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தங்கியுள்ளனர். இந்த வளாகத்திற்கு தேவையான மின்சாரம் மாணவர்கள் தங்கும் கட்டிடங்களுக்கு அருகிலேயே மின்மாற்றி மூலம் வழங்கிட அறை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மாணவர் தங்கும் விடுதி அருகே அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியில் தற்பொழுது தீ விபத்து ஏற்பட்டு எரிய தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  கடந்த ஒரு மணி நேரமாக சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் மின்மாற்றி மற்றும் இதர மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. மாணவர்கள் விடுதியின் ஒதுக்குப்புறமாக மின்மாற்றி அறை அமைந்துள்ளதால் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.