மாலத்தீவில் இறந்த இந்தியர்கள் உடல்கள் அனுப்பி வைப்பு| Dinamalar

மாலி, மாலத்தீவில் சமீபத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த எட்டு இந்தியர்களின் உடல்கள் நேற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தெற்கு ஆசிய நாடான மாலத்தீவின் தலைநகர் மாலியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதி உள்ளது.

இதன் தரைத் தளத்தில், வாகனங்களை பழுது நீக்கும் ஒர்க் ஷாப் இருந்தது.

கடந்த ௧௦ம் தேதி இரவு இந்த ஒர்க் ஷாப்பில் இருந்து தீப்பிடித்து, முதல் தளம் வரை பரவியது. இதில், துாங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட எட்டு இந்தியர்கள் பலியாகினர். இவர்களில் இருவர் தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள்.

இவர்களது உடல்கள் நேற்று விமானம் வாயிலாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாலத்தீவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.