புதுடில்லி: மேற்கு வங்க கவர்னராக, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதியாக தேர்வாகி, கடந்த ஆகஸ்டில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, மணிப்பூர் மாநில கவர்னர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்கத்தை கவனித்து வந்தார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் புதிய கவர்னராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சி.வி.ஆனந்த போஸ், 71, நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் நேற்று அறிவித்துள்ளது.
இவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும், முசோரியில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்தில் விருது பெற்றவர். எழுத்தாளரான இவர் கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement