கொரோனாவுக்குப் பிறகு இமாச்சலில் புத்துயிர் பெற்றது சுற்றுலா துறை: பயணிகள் வருகை 3 மடங்கு அதிகரிப்பு

சிம்லா: கொரோனாவுக்கு பிறகு தற்போது இமாச்சல பிரதேசத்தின் சுற்றுலா துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2020ம் ஆண்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. 2019ம் ஆண்டு 1.72 கோடி சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், 2020ம் ஆண்டு வெறும் 32.13 லட்சமாக குறைந்தது. கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், சுற்றுலா துறை பெரிய அளவில் மாற்றம் பெறவில்லை. கடந்த ஆண்டு 56.37 லட்சமாக அதிகரித்தது.

இந்நிலையில், இந்த ஆண்டில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வந்ததால், அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட நிலையில், இமாச்சலுக்கு மீண்டும் பழையபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை அங்கு 1.28 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில் 28,232 பேர் வெளிநாட்டினர் என அம்மாநில சுற்றுலா துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.