#தமிழகம் | பற்றி எறியும் பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரம் – அதிர்ச்சி காணொளி!

சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீ விபத்து/கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் நிலையில், இன்று இரவு சுமார் 8 மணி அளவில் கோவில் கோபுரம் சாரம் மேல் மூடிருந்த துணியில் தீப்பற்றி இருந்துள்ளது.

50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பராசக்தி பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. 

தற்போது ராஜ கோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த தார்பாயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின் படி ராக்கெட் பட்டாசின் தீப்பொறி பட்டு இந்த தீ விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.