சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் ராஜகோபுரத்தில் தீ விபத்து/கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயில் கோபுரம் எதிர்பாராத விதமாக தீ
பிடித்து எரிகிறது #sivakasi #fire pic.twitter.com/HJcGokdfrv— எம். சின்னத்தம்பி (@cinnattampi) November 20, 2022
சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வரும் நிலையில், இன்று இரவு சுமார் 8 மணி அளவில் கோவில் கோபுரம் சாரம் மேல் மூடிருந்த துணியில் தீப்பற்றி இருந்துள்ளது.
சிவகாசி பத்திர காளியம்மன் கோவில் கோபுரத்தில் தீடீர் தீ விபத்து pic.twitter.com/V3MA567vi1
— Padmanaban Business Traveller (@Padmanaban1967) November 20, 2022
50 ஆண்டுகள் பழமை வாய்ந்த பராசக்தி பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கோபுர சாரத்தில் தீ பற்றி எரியும் காட்சி… தீ கட்டுக்குள் வந்தது…#Sivakasi pic.twitter.com/qmNvfPxKXR
— Bala vetrivel ந (@vetrivel1996) November 20, 2022
தற்போது ராஜ கோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த தார்பாயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின் படி ராக்கெட் பட்டாசின் தீப்பொறி பட்டு இந்த தீ விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.