மங்களூருவில் ஆட்டோவில் நேரிட்ட குண்டுவெடிப்பை கர்நாடக டி.ஜி.பி. முறையாக தெரிவித்துள்ளதாகவும், கோவை சம்பவத்தை தமிழக அரசு இதுபோன்று முறையாக கையாளவில்லை என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மங்களூருவில் நடந்த சம்பவம், எதிர்பாராவிதமாக நடந்த விபத்து அல்ல, தீவிரவாத செயல் என கர்நாடக டி.ஜி.பி. தெரிவித்திருந்தார்.
இதனை, தனது டிவிட்டர் பதிவில் மேற்கோள்காட்டிய அண்ணாமலை, குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு மக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு மங்களூரு சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்றார்.