35 துண்டுகளாக வெட்டி கொலை காதலியின் மண்டை ஓடு, தாடை எலும்பு கிடைத்தன: அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை

புதுடெல்லி: டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட லிவ்-இன் காதலியின் மண்டை ஓடு, தாடை எலும்புகள் காட்டில் கிடைத்தன. டெல்லி ஹெ்ராலி பகுதியில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாமல் வாழ்ந்து வந்த காதலி ஷ்ரத்தாவை காதலன் அப்தாப் 35 துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ஒருவாரம் கடந்த பிறகும், கொல்லப்பட்ட ஷ்ரத்தாவின் முழு உடல் பாகங்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய அப்தாப் அவற்றை பல இடங்களில் வீசி உள்ளார். குறிப்பாக, தலையை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

தலைப்பகுதியை மெஹ்ராலி பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வீசியதாக, ஆரம்பக் கட்ட விசாரணையில் அப்தாப் கூறி உள்ளார். இதனால், குளத்தில் உள்ள முழு தண்ணீரையும் வெளியேற்றி தேட போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், வனப்பகுதியில் காதலின் மண்டை ஓடு, தாடை எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போலீஸ் விசாரணையில் அப்தால் குற்றத்தை ஒப்புக் கொண்ட போதிலும், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம், கொலைக்கான காரணத்தை போலீசாரால் கண்டறிய முடியவில்லை.

இந்த வழக்கில் இன்னும் வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நீதிமன்றம் வழங்கிய 5 நாள் போலீஸ் காவல் நாளையுடன் முடிய உள்ளது. இதனால் இன்று அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் அவனிடம் 50 கேள்விகள் கேட்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சோதனைக்குப் பிறகு கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.