5 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, பொது மக்கள் ஐந்து நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து இந்த ஆண்டு தொடக்கம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது.

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி கடைபிடிக்கப்படுவதால், கொரோனா பரவல் அதிகம் உள்ள, வூகானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

5 நாட்களுக்கு ஊரடங்கு
இந்நிலையில், செங்சோ மாகாணத்தில் உள்ள 8 மாவட்ட மக்கள், இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த எட்டு மாவட்டங்களில் சுமார் 66 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உணவு வாங்கவும், மருத்துவ சிகிச்சை பெற மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதி: யார் இந்த லெப்டினென்ட் ஜெனரல் அசிம் முனீர்?

அத்தியாவசியமின்றி வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த ஐந்து நாட்களில், மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அரசு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதிகபட்ச பாதிப்பு
சீனாவில், கடந்த 24 மணி நேரத்தில், 31 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது, கொரோனா வைரஸ் தொற்று பரவியதில் இருந்து பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் சீன மக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.