புவனேஷ்வர், ஒடிசாவில், பெண்நக்சலைட்டுகள் இருவர் நேற்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஒடிசாவில் போலாங்கீர்மாவட்டத்தில் உள்ள காந்தமர்தன் மலைப்பகுதியில், நக்சலைட்டுகளை தேடும் பணியில் மாநில சிறப்பு காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வனப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே சில நக்சலைட்டுகள் முகாமிட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் வீரர்களை நோக்கி சுட்டனர்.
உடனடியாக பதிலடி கொடுத்த வீரர்கள், பெண் நக்சலைட்டுகள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement