பீஜிங், சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் பலியாகினர்; ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.
நம் அண்டை நாடான சீனாவில், ஜின்ஜியாங் மாகாணத்தின் தியான்ஷன் மாவட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நேற்று முன்தினம் இரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்; ஒன்பது பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குடியிருப்பில் மின் கசிவு ஏற்பட்டதே தீ விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. சில தினங்களுக்கு முன் தான், ஹெனான் மாகாணம் வென்பங் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி, 38 பேர் உயிரிழந்தனர். அஜாக்கிரதை காரணமாக, சீனாவில் தீ விபத்து தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement