தமிழக அரசு மேல்முறையீடுக்கு ஆன்லைன் நிறுவனங்கள் பதில்: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.  இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், எதிர்மனுதாரர்களான ஆன்லைன் ரம்மி மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஆன்லைன், ரம்மி விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘ஆன்லைன் விளயாட்டு தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தற்போது இரண்டாவதாக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முதலாவதாக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு மனு காலாவதி ஆகிவிட்டது. அதனால் இதனை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.