நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற 'இவர்களின்' ஓட்டு வங்கி மிக முக்கியம் – வேலூர் இப்ராகிம் போடும் பலே பிளான்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் மஹாலில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜகவின் சிறுபான்மையினர் அணி சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு சிறுபான்மையினர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் கூறியதாவது: “எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி எவ்வளவு அவசியம் எனவும், சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள நலத்திட்டத்தை எவ்வாறு அந்த மக்களிடத்தில் கொண்டு செல்வது ஆகியவற்றை குறித்து சிறுபான்மையின மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வாக்கு வங்கிகளாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ள திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை எவ்வாறு எதிர்கொள்வது திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு சிறுபான்மையினர் வாக்கு வங்கி எவ்வளவு அவசியம் என

பாஜக மீது வைக்கப்படும் மூன்று குற்றச்சாட்டுக்கள்:

தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி சார்பில் தெரு பிரச்சாரங்கள், பொது கூட்டங்கள், மத நல்லிணக்க கூட்டங்கள் ஆகியவற்றை எவ்வாறு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. திமுக உள்ளடக்கிய எதிர்கட்சிகள் பாஜக மீது வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் இரண்டே இரண்டு தான். முதல் குற்றச்சாட்டு பாரதிய ஜனதா கட்சி என்பது வட மாநில கட்சி, பிராமணர்களின் கட்சி, இந்திக்கு ஆதரவளிக்க கூடிய கட்சி, தமிழர் விரோத கட்சி, இனவாத, மொழிவாத விஷயங்களை கூறி கூட்டணி கட்சிகள் திமுகவை எதிர்ப்பதற்கு பயன்படுத்தும் குற்றச்சாட்டு.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

ஆனால் பாரத பிரதமர் பேசக்கூடிய அனைத்து இடங்களிலும் தொன்மை வாழ்ந்த மொழி மிக முக்கியமான மொழி தமிழ் என்று தான் பேசுகிறார். எனவே திராவிட கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். இதன் காரணமாகவே பாஜக தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இரண்டாவது குற்றச்சாட்டாக இது ஒரு இந்துத்துவ சித்தாந்தங்களை கொண்ட கட்சி. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமையை பறிக்கக் கூடிய கட்சி. பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட்டால் சிறுபான்மையினர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்பது போன்ற அச்சத்தை விதைக்கிறார்கள்.

முதலாவது குற்றச்சாட்டுக்கு மாநில தலைவர் உட்பட அனைவரும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு புரிய வைத்து வரும் நிலையில், இரண்டாவது குற்றச்சாட்டுக்கு பாஜகவில் உள்ள சிறுபான்மை அணியினர் மட்டுமே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு சிறுபான்மையினரின் பங்கு என்பது மகத்தானதாக உள்ளது, பொய் குற்றச்சாட்டுகளை இஸ்லாமியர்கள் எப்படி நம்புகிறார்களோ, அதே போன்று நடுநிலை இந்துக்களும் நம்புகிறார்கள். எனவே இரண்டு தரப்பு மக்களுக்காகவும் பாஜக எந்த விதமான நலத்திட்டங்களை செய்து உள்ளது.

வாக்கு வங்கிகளாக பயன்படுத்தப்படும் இஸ்லாமியர்கள்:

கடந்த 50 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வாங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி வந்தது. இஸ்லாமியர்களின் கல்வியில் பொருளாதாரத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் அவர்களை தீவிரவாதிகளாக ஆக்குவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்துள்ளது. இந்த நிலையை பாஜக ஏற்கவில்லை.

பாஜகவை பொறுத்தவரை எல்லோரையும் அரவணைத்து, எல்லோருக்கும் வளர்ச்சி என்ற அடிப்படை நோக்கில் தான் திட்டங்களை முன்வைத்திருக்கிறோம். எனவே தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் போது சிறுபான்மையினரின் பங்கு அதிகமாக இருக்கும். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொது சிவில் சட்டத்தை கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இதை எதிர்க்கும் சில பயங்கரவாத அடிப்படைவாத சக்திகள் குரல் கொடுக்கிறார்கள், பாஜகவை பொறுத்தவரை நாங்கள் எதை தேர்தலில் வாக்குறுதலாக கொடுத்துள்ளோமோ அதையே செயல்படுத்தி வருகிறோம். அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

பொது சிவில் சட்டம்:

காஷ்மீரில் 370 ஆர்டிகல் நீக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து அதை நீக்கி உள்ளோம். ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் சட்டப்படி கட்டி நிகழ்த்தி காட்டியுள்ளோம். அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் பரப்பளவில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு வருகிறது. அது போன்று தான் ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் என்ற அடிப்படையில் இந்த தேசத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே நீதி வழங்க வேண்டும் என்றால் சட்டங்கள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் தான் பொது சிவில் சட்டத்தை பாஜக கொண்டு வருகிறது. இதை இந்த முறை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இதை தமிழக பாஜக வரவேற்கிறது. இதை யார் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ, இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது, கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கால் மதகுருமார்களோ அல்லது எதிர்க்கட்சியில் இருப்பவர்களோ சமயப் பெரியோர்களே யாராக இருந்தாலும் அவர்களுடன் நாங்கள் இது குறித்து விரிவாக விவாதிக்க தயாராக இருக்கிறோம். அவர்களோடு நல்ல ஒரு கலந்துரையாடலை நல்ல ஒரு புரிதலை வழங்குவதற்கும் தயாராக இருக்கிறோம் தேவையற்ற தவறான அவதூறுகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மதகுருமார்களும் பரப்பாமல் பொது சிவில் சட்டத்தால் இந்த நாட்டிற்கு எத்துணை நன்மை பயக்கபோகிறது என்பதை எடுத்துக் கூற எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

எனவே இது குறித்து அனைவரிடத்திலும் கலந்துரையாடல் நடத்த பாஜகவின் சிறுபான்மையினர் அணி சார்பில் தயாராக இருக்கிறோம். இனிமேல் நடக்கக்கூடிய பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் பொது சிவில் சட்டம் குறித்த தெளிவான உரையை நாங்கள் வழங்க உள்ளோம். நமது தேசம் ஒரு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, இந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய திமுக அரசின் அமைச்சர்கள் மக்களை ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

முதலமைச்சருக்கு இதுகுறித்துதான் அதிக கவலை…

முதலமைச்சர் கழகத் தலைவன் படம் நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டுள்ளார். மாணவி உயிரிழப்பு விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தாமல் தனது மகன் நடித்துள்ள படம் நன்றாக இருக்கிறதா என்பதில் முதலமைச்சருக்கு அதிக கவலை உள்ளது. ஊழலை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படும் திமுக அரசை மிக விரைவில் வெளியேற்றி ஊழலற்ற தேசிய சிந்தனை மிக்க ஆட்சியை அமைக்கும் விதமாக பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.