பேரிடர் நிகழ்வுகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்தி வெளியிடணும்: அனுராக் தாகூர் வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி: நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகிய பேரிடர் நிகழ்வுகள் தொடர்புடைய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

ஆசிய பசிபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய பொது சபை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசியவதாவது: நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகிய பேரிடர் நிகழ்வுகள் தொடர்புடைய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும்.

latest tamil news

பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை, நேரடியாக வெளியிடும்போது, தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான தடயங்களை அளிப்பதோ, அவர்களின் தவறான நோக்கங்களுக்கு இடம் அளித்து விடக்கூடாது.

உலகெங்கிலும் உள்ள நம் அனைவருக்கும் கோவிட் நெருக்கடி சோதனைக்கான நேரமாக உள்ளது.ஊரடங்கின்போது, வெளி உலகத்துடன் மக்களை இணைத்தது ஊடகங்கள்தான். இதுபோன்ற சூழ்நிலைகளில், செய்திகளை சரியான நேரத்தில் மக்களுக்கு வழங்குவது ஊடகத்தின் பொறுப்பாகும்:

பொதுவாக,கோவிட் காலங்களில் விழிப்புணர்வு செய்திகள், முக்கியமான அரசாங்க வழிகாட்டுதல்கள் மற்றும் இலவச ஆன்லைன் ஆலோசனைகளை இந்த நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் மருத்துவர்கள் சென்றடைவதை உறுதி செய்தனர். இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.