2000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் ‘மெயின் ஷிஃப் 5’ (Mein Schiff-5) என்ற சொகுசு பயணிகள் கப்பல் நேற்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இவர்களை வரவேற்கும் நிகழ்வில், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.