மனித தவறினால் அதிகளவு எண்ணெய் கடலில் கலப்பதனால் உயிரினங்கள் அழிகின்றன

கடல்வளத்தை பாதுகாப்பது தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு  கடல்சார் சூழல் பாதுகாப்பு  அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரி.தயாரூபன்  தலைமையில்  இன்று (30) நடைபெற்றது.

இதன் போது கடல்சார் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடலில் எண்ணெய் கலத்தல், சர்வதேச கப்பல் வழிப்பாதையில்  இலங்கை அமைந்துள்ளதால் நிகழும் எண்ணெய் கசிவு, போன்ற விளைவுகளைத் தவிர்ப்பது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அதிகாரசபை தெளிவுபடுத்தியது.
மனித தவறினால் அதிகளவு எண்ணெய் கடலில் கலப்பதனால் கடல்வாழ் உயிரினங்களின் பல்வகைமை அழிவதும்  இதனால் ஏற்படும்  விளைவுகள்  நீண்ட காலம்  நீடிக்கின்றது. 
கடந்த  காலங்களில் எமது கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்களினால் அதிகளவு பாதிப்பை எமது நாடு எதிர்நோக்கியிருந்தது.
நீரின் மேற்பரப்பில் எண்ணெய் படிவுகளினால் அதிக நச்சுத்தன்மை மிகுந்த  நீலநிற அல்காக்கலள் உருவாகின்றன. 
இவ்வாறே நீரின் மேற்பரப்பில் எண்ணெய் படிவுகள் படிவதனால் சூரிய ஒளி உட்புகாது கடற்தாவரங்கள் அழிவடைகின்றன.
 உலகிற்கு அதிகளவு ஒட்சிசனை உற்பத்தி செய்பவை கடல் தாவரங்களாகும்.
 கடல் தாவரங்கள் அழிவடையும் போது உலகம்  வெப்பமடைகின்றது. 
கடல் வளத்தினை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும் என்பது குறித்து தெளிவாகக் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றன.
இச் செயலமர்வில் பங்குபற்றியவர்கள் கடல்வளத்தை பாதுகாக்க  அவசியமான  சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வின் வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் Dr.எஸ்.சதாநந்தன் மற்றும் Dr.ராஜேந்திரம்  மற்றும் கடல்சார்  சூழல் பாதுகப்பு அதிகாரசபையின்   உதவி முகாமையாளர் அமரநாயக்க, உதவி முகாமையாளர் நில்பிரியதர்சன, மற்றும் வட கிழக்கு பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி முகாமையாளர் ஸ்ரீபதி , அரச நிறுவன தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள், முப்படையினர் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


M M Fathima Nasriya

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.