செயற்கை கோள் அனுப்பிய குஜராத் மாநில புகைபடம்: பிரதமர் மோடி பகிர்ந்தார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை :’இஸ்ரோ’ நிறுவனம், சமீபத்தில் விண்ணில் செலுத்திய பி.எஸ்.எல்.வி., சி.54 ராக்கெட்டின் இ.ஓ.எஸ். 06 செயற்கைகோள் அனுப்பிய புகைபடத்தை பிரதமர் மோடி பகிர்ந்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., – 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., – சி54 ராக்கெட் கடந்த நவம்ப 26-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி54 ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாக பாய்நது.

latest tamil news

அப்போது இ.ஓ.எஸ்., – 6, செயற்கைக்கோள் ,விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்தியாவின் இ.ஓ.எஸ்., – 6, மூன்றாம் தலைமுறைக்கான புவியை கண்காணிக்கும் திறன் உடைய இந்த செயற்கை கோள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நான்கு செயற்கைக்கோள் படங்களை அனுப்பியது.

இதனை பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பகிர்நதுள்ளார்.விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட இஓஎஸ்-06 செயற்கைக்கோள் எடுத்த ஆச்சரியமளிக்கும் படங்களை நீங்கள் பார்த்தீர்களா? குஜராத்தின் சில அழகான படங்களை பகிர்கிறேன்” என பிரதமர் மோடி எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.