வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆம் திகதியிலிருந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி ,ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய (01) தினம் நிதி ,ராஜாங்க அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,குறிப்பிட்ட காலப்பகுதிக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், வருமான வரி கணக்கு விபரங்களை தாக்கல் செய்வதற்காக பலரும் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக கணினி செயற்பாடுகளில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார். இதன் காரணமாக இந்த கால நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதி ,ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.