மாஸ்கோ: ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்க விரும்புபவர்களை தொடர்ந்து ஆதரிப்போம் எனக்கூறியுள்ள அந்நாட்டு அதிபர் புடின், சர்வதேச சந்தையில் ரஷ்ய கச்சா எண்ணெயின் தேவையை யாராலும் தடுக்க முடியாது எனக்கூறியுள்ளார்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு கட்டுப்பாடு விதிக்கவும், வருமானத்தை குறைக்கவும் முடிவு செய்துள்ள ஜி7 நாடுகள், அதற்காக ரஷ்ய கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 60 டாலர் ஆக கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், விலை கட்டுப்பாடு விதிக்கும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மாட்டோம். ஜி7 நாடுகளின் முடிவானது, இலவச சந்தை கொள்கையை மாற்றியமைக்கும் வகையில் உள்ளது. எவ்வளவு கட்டுப்பாடுகள் வந்தாலும், ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற நடவடிக்கைகள், சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதுடன், விலையை அதிகரிக்க செய்து நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement