“அப்பாவும், சித்தப்பாவும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்!" – போலீஸில் புகாரளித்த 15 வயது சிறுமி

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசிப்பவர் பிரமோத் ஜோகிந்தர் சாஹு (48). இவரின் முதல் மனைவியின் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் மனைவி, மற்றும் முதல் மனைவியின் 15 வயது மகள், 4 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பிரமோத்தின் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் சிறுமியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், “கடந்த நவம்பர் 1-ம் தேதி என்னுடைய தந்தை, என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பிறகு என்னை பீகாரில் இருக்கும் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துவிட்டார். அங்கு மும்பை கண்டிவாலியைச் சேர்ந்த என் சித்தப்பா கவுரி சங்கர் சாஹு (44) என்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறினார். இதனால் நான் மிகவும் பயந்திருந்தேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமை

அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை IPC -ன் பிரிவுகள் 376, 376 (2) (n), 376 DA, 376 (3), மற்றும் 506 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவுகள் 4, 6, 8, மற்றும் 12 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி, மும்பை குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.